Tuesday 25 July 2017

கவனிக்க வேண்டிய விஷயங்கள்

கவனிக்க வேண்டிய விஷயங்கள்-எஸ்ஐபி முறை மூலம் கவனிக்க வேண்டிய விஷயங்கள்



எஸ்ஐபி முறை மூலம் கவனிக்க வேண்டிய விஷயங்கள்

எஸ்ஐபி முறையில் முதலீட்டை மேற்கொள்ளும்போது.முதலில் ஒரு பங்கைத் தேர்ந்தெடுக்கும் முன் அலசி ஆராய்ந்து அதன்பிறகு முதலீடு செய்ய வேண்டும். நிறுவனத்தின் கடந்த காலச் செயல்பாடு மற்றும் நிர்வாகம் எப்படியிருக்கிறது என்பதைப் பார்க்க வேண்டும்

நிறுவனத்தின் வளர்ச்சி, விற்பனை அதிகரி த்து வருகிறதா என்பதைக் கவனிக்க வேண்டும். இவ்வாறு இருந்தாலே அந்த நிறுவனத்தின் லாபமானது அதிகரித்துக் கொண்டே வரும்.இப்போதிருக்கும் நிலையைப் பொறுத்தவரை, ஆயில் மற்றும் இயற்கை எரிவாயு, விமானப் போக்குவரத்து, பொழுதுபோக்கு, ஆட்டோமொபைல் மற்றும்

அதன் உதிரிபாகங்கள், எ·ப்.எம்.சி.ஜி.ரீடெய்ல் சார்ந்த துறை நிறுவனப் பங்குகள் முதலீட்டுக்கு ஏற்றதாக இருக்கும். மாருதி, டி.வி.எஸ் மோட்டார், எக்ஸைட் பேட்டரி, அமரராஜா பேட்டரீஸ், அப்போலோ டயர்ஸ், பி.வி.ஆர், ஐநாக்ஸ், சன் டிவி, ஐ.ஒ.சி., ஹெச்.பி.சி.எல், ஸ்பைஸ் ஜெட், எண்டிகோ போன்ற பங்குகளில் எஸ் ஐ பி முறையில் முதலீட்டை மேற்கொண்டு லாபம் ஈட்டலாம்.




Mutual Fund Advisor

No comments:

Post a Comment